Pages

3. அறன் வலியுறுத்தல்-5

3. அறன் வலியுறுத்தல்-5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் - 35

Tamil Meaning:

பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

English meaning :

Four ills eschew and virus reach,

Lust, anger, envy, evil-speech.

3. அறன் வலியுறுத்தல்-4

3. அறன் வலியுறுத்தல்-4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற - 34

Tamil Meaning:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்;
மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

English Meaning:
In Spotless mind virtue is found
And not in show and swelling sound.

3. அறன் வலியுறுத்தல்-3

3. அறன் வலியுறுத்தல்-3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல் - 33

Tamil meaning:

செய்யக் கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்

தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

vEnglish Meaning:

Perform good deeds as much you can

always and everywhere , O man

3. அறன் வலியுறுத்தல்-2

3. அறன் வலியுறுத்தல்-2

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Tamil Meaning:
நன்மைகளின் விலை நிலமாக இருக்கும் அறத்தைப் போல்
ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை;
அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

English Meanning:
virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.
3. அறன் வலியுறுத்தல்-1

3. அறன் வலியுறுத்தல்-1

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - 31

Tamil meaning:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

English meaning:
From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?
2. நீத்தார் பெருமை - 10

2. நீத்தார் பெருமை - 10

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். - 30

Tamil Meaning:
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள்புரியும்
சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

English Meaning :
With gentle mercy towards all,
The sage fulfils the vitue's call.
2.நீத்தார் பெருமை - 9

2.நீத்தார் பெருமை - 9

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. - 29

Tamil Meaning:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

English Meaning:
Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood.
2. நீத்தார் பெருமை - 8

2. நீத்தார் பெருமை - 8

நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து

மறை மொழி காட்டி விடும். - 28

Tamil Meaning:

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

English Meaning:

Full-worded men by what they say, Their greatness to the world display.

2. நீத்தார் பெருமை - 7

2. நீத்தார் பெருமை - 7

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான் கட்டே உலகு. 27

Tamil Meaning:
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன்
கொண்டவனையே உலகம் போற்றும்.

English Meaning:
They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell.


2. நீத்தார் பெருமை -  6

2. நீத்தார் பெருமை - 6

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 2.6
Tamil Meaning:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,
சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச்
செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.

English Meaning:
Ther small the paths of ease pursue
The Great achieve things rare to do.
3.நீத்தார் பெருமை -5

3.நீத்தார் பெருமை -5

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி . - 25

Tamil Meaning:
புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும்
மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி,
ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால்
வான் புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

English Meaning:
Indra himself has cause to say
How great the power ascetics sway.
3.நீத்தார் பெருமை - 4

3.நீத்தார் பெருமை - 4

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.


Tamil meaning:
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும்
அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு
ஏற்ற விதையாவான்.


English meaning:

With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.
3. நீத்தார் பெருமை - 3

3. நீத்தார் பெருமை - 3

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

Tamil meaning:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை
மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

English Meaning:
No lustre can with theirs compare
Who know the right and virtue wear.
3. நீத்தார் பெருமை  - 2

3. நீத்தார் பெருமை - 2

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொன் டற்று.

Tamil meaning

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற
முடியுமா..? அது போலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த
உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

English meaning

To con ascetic glory here
Is to count the dead upon the sphere.
3.நீத்தார் பெருமை- 1

3.நீத்தார் பெருமை- 1

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

Tamil meaning
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,
சான்றோர் நூலில் விருப்பமுடனும்,
உயர்வாகவும் இடம் பெறும்.

English meaning
No merit can be held so high
As theirs who sense and self deny.

2.10

2.10

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.

Tamil Meaning
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே
கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால்,
நீரின் இன்றியமையாமையை உணர்ந்து
செயல்படவேண்டும்.

English Meaning
Water is life that comes from rain
Sans rain our duties go in vain.
2.9

2.9

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது
பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும்,
தன் பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

Were heaven above to fail below
Nor alms not penance earth would show.

2.8

2.8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த
வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு
விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.

The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.
2.7

2.7

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான்
கடல்கூட வற்றாமல் இருக்கும்.

The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.
2.6

2.6

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி
மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.


No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.
2.5

2.5

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக்கூடியதும்
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம்
சேர்ப்பதும் மழையே ஆகும்.

Destruction it may sometimes pour
But only rain can life restore.

2.4

2.4

ஏரின்உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய் குறைந்து விட்டால்,
உழவுத்தொழில் குன்றி விடும்.

Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.
2.3

2.3

வின் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால்
பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.
2.2

2.2

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

யாருக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ,
அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச்
செய்கிறது.

The rain begets the food we eat
And forms a food and drink concrete.

2.1

2.1

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்ர்ருணரற் பாற்று. .. 2.1

உலகத்தை வாழ வைப்பது மழையாகஅமைந்திருப்பதால்
அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

The geneal rain ambrosia call;
The world but lasts while rain shall fall.
1.10

1.10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். .. 1.10


வாழ்க்கை என்னும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

The sea of births they alone swim
Who clench His feed and cleave to Him.
1.9

1.9

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. ... 1.9


உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவன் நிலையும் ஆகும்.

Like senses stale that head is vain
Which bows not to Eight-Virtued Divine.
1.8

1.8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அந்தனர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,
அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி
நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்
கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue's Sea.
1.7

1.7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

His feet, whose likeness none can find,
Alone can ease the anxious mind.
1.6

1.6

பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்
கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப்
பின்பற்றி நிற்பவர்களின் புகழ் வாழ்வு நிலையானதாக அமையும்.

They Prosper long who walk his way
Who has the senses signed away.
1.5

1.5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு
புகழ் பெற விரும்புபவர்கள், நன்மை தீமைகளை ஒரே
அளவில் எதிர் கொள்வார்கள்.

God's Praise who tell, are free from right and wrong,
the twins of dreaming night.
1.4

1.4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. -- 4

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

Who hold his feet who likes not loathes
Are free from woes of human births.
1.3

1.3

மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் -- 3

மலர் போன்ற மனத்தில் நினைத்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

Long they live on earth who gain
The feet of God in florid brain.
1.2

1.2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழா அர் எனின்.

தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையலரின் முன்னே வணங்கி நிற்கும்
பண்பு இல்லாவிடின் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?
ஒன்றுமில்லை

That lore is vain which does not fall
At his good feet who knoweth all.
Kural 1.1

Kural 1.1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதி பகவன் உலகின் வாழும் உயிர்களுக்கு முததன்மை.
"A" leads letters; the ancient Lord Leads and lords the entire world.

Labels

kural ( 7 ) rain ( 6 ) virtue ( 5 ) long live on earth ( 3 ) senses ( 3 ) மழை ( 3 ) heaven ( 2 ) neethar perumai ( 2 ) thirukkural ( 2 ) vain ( 2 ) அரிது ( 2 ) ஆக்கம் ( 2 ) உலகு ( 2 ) 3. அறன் வலியுறுத்தல்-3 ( 1 ) Destruction ( 1 ) Indra ( 1 ) Lust ( 1 ) alms ( 1 ) alone swim ( 1 ) ancient ( 1 ) anger ( 1 ) appear ( 1 ) ascetic ( 1 ) begets ( 1 ) begets the food ( 1 ) beneath ( 1 ) bow ( 1 ) clasps ( 1 ) cleave to him ( 1 ) clench ( 1 ) climbed ( 1 ) cloud ( 1 ) compare ( 1 ) deny ( 1 ) display ( 1 ) distresses ( 1 ) drink concrete ( 1 ) ease ( 1 ) envy ( 1 ) evil-speech ( 1 ) fall ( 1 ) fruitful shower ( 1 ) full-worded ( 1 ) gain the world ( 1 ) geneal ( 1 ) grasp and tell ( 1 ) grassy ( 1 ) greatness ( 1 ) hearing ( 1 ) heaven to gain ( 1 ) held ( 1 ) hook of firmness ( 1 ) joy and gain ( 1 ) knowth ( 1 ) life restore ( 1 ) loathes ( 1 ) lord ( 1 ) lustre ( 1 ) mankind ( 1 ) merit ( 1 ) mount of good ( 1 ) ocean ( 1 ) offerings ( 1 ) paths of ease ( 1 ) penance ( 1 ) ploughman ( 1 ) power ( 1 ) prosper ( 1 ) pulangal ( 1 ) pursue ( 1 ) rare ( 1 ) retrain ( 1 ) sacred toil ( 1 ) sage ( 1 ) sans ( 1 ) sea-girt ( 1 ) self deny ( 1 ) sight ( 1 ) smell ( 1 ) spotless ( 1 ) sway ( 1 ) swelling sound ( 1 ) swim ( 1 ) tamil ( 1 ) tamil kural ( 1 ) the earth ( 1 ) thiruvalluvar ( 1 ) twins of dreaming night ( 1 ) virtued ( 1 ) vitue ( 1 ) water ( 1 ) wealth ( 1 ) wear ( 1 ) woes ( 1 ) wrath ( 1 ) அங்குசம் ( 1 ) அடிசேராதார் ( 1 ) அந்தணன் ( 1 ) அந்தணர் ( 1 ) அறத்தினூங்கு ( 1 ) அறம் ( 1 ) அறம் பூண்டார் ( 1 ) அறவழி ( 1 ) அறவாழி ( 1 ) அறவோர் ( 1 ) ஆரவாரம் ( 1 ) இந்திரனே ( 1 ) இருமை ( 1 ) இருள்சேர் ( 1 ) ஈண்டு ( 1 ) உடற்றும் பசி ( 1 ) உத்தமர்களின் ( 1 ) உயிர்க்கு ( 1 ) உரனென்னுந் ( 1 ) உழவுத்தொழில் ( 1 ) எண்ணிக்கொன் டற்று ( 1 ) ஏரின்உழாஅர் ( 1 ) ஐந்தவித்தான் ( 1 ) ஐம்புலன் ( 1 ) ஒல்லும் ( 1 ) ஒழுக்கத்து ( 1 ) ஒழுக்கு ( 1 ) கரி ( 1 ) கற்றதனால்.. ( 1 ) காட்டி விடும் ( 1 ) காத்தல் அரிது ( 1 ) கால் ( 1 ) குணமென்னும் ( 1 ) குனக்குன்றுகள் ( 1 ) கெடுக்கக்கூடியதும் ( 1 ) கெடுப்பதூஉம் ( 1 ) கேடு ( 1 ) கோளில் ( 1 ) சிறப்பு ஈனும் ( 1 ) சிறப்பொடு ( 1 ) சிறியர் ( 1 ) சுவையொளி ( 1 ) செயற்கரிய ( 1 ) செய்கலா தார் ( 1 ) தடிந்தெழிலி ( 1 ) தனக்குவமை ( 1 ) தலை ( 1 ) தானத்திற்கும் ( 1 ) தானம் ( 1 ) துணிவு ( 1 ) துப்பார்க்கு ( 1 ) துறந்தார் ( 1 ) துறவறம் ( 1 ) துறவிகளின் ( 1 ) தூஉம் மழை. ( 1 ) நிறை மொழி ( 1 ) நீடுவாழ் வார் ( 1 ) நீத்தார் பெருமை ( 1 ) நீந்தல் அரிது ( 1 ) நீர பிற ( 1 ) நீர் இன்று ( 1 ) நெடுங்கடலும் ( 1 ) பசும்புல் ( 1 ) பாற்று ( 1 ) பிறவிப் பெருங்கடல் ( 1 ) புண்படுத்தும் சொல் ( 1 ) பூண்டொழுக லான் ( 1 ) பெரியர் ( 1 ) பெருங்கடல் ( 1 ) பேராசை ( 1 ) பொங்கும் கோபம் ( 1 ) பொய்த்து ( 1 ) பொறாமை ( 1 ) பொறி வாயில் ( 1 ) மனத்துக்கண் ( 1 ) மறை மொழி ( 1 ) மலர்மிசை ( 1 ) மாட்டு ( 1 ) மாற்றல் அரிது ( 1 ) வற்றாமல் ( 1 ) வளங்குன்றிக் கால் ( 1 ) வளம் சேர்ப்பதும் ( 1 ) வழங்கா தெனின் ( 1 ) வானமே ( 1 ) வானம் ( 1 ) வானின்று ( 1 ) வான் இன்று ( 1 ) விசும்பின் ( 1 ) விடின் ( 1 ) விடும்போது ( 1 ) வித்து ( 1 ) வின் இன்று ( 1 ) வியனுலகம் ( 1 ) வேண்டாமை ( 1 ) வேண்டுதல் ( 1 )